பின்பற்றுபவர்கள்

சனி, 29 ஆகஸ்ட், 2015

தங்கக் கிளியே மொழி பேசு..Thanga kiliye mozhi pesu..


OPENDRIVE update செய்திருக்கிறார்கள். audio சரியாக அமையவில்லை. மன்னிக்கவும். விரைவில் சரி செய்ய முயற்சிக்கிறேன். அதுவரை காண்னோளியில் ரசியுங்கள்.

சீர்காழி கோவிந்தராஜன்:
அன்றைய காலத்தில்,’நீ அல்லால் தெய்வம் இல்லை ,எனது நெஞ்சே நீ வாழும் எல்லை ,முருகா !..’ என்று பாடி இறுதி வரை பல தெய்வப் பாடல்கள் தந்தவர். இவர் தமிழ் திரை வானிலும் பல இன்னிசை பாடல்களை நமக்குத் தந்தவர். எனக்குத் தெரிய இவரது முதல் திரைப் பாடலாய் நான் ரசித்தது , ‘அமுதும் தேனும் எதற்கு ...’ தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில். உயரிய ராகத்தில் ,தெளிவான உச்சரிப்பில், கணீரென்று அன்று பாடியது இவர் ஒருவரே. அந்த இடத்தை இன்னும் யாரும் பிடிக்கவில்லை என்றே சொல்லலாம். பிறகு வரிசையாக, ‘சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் ... ‘ நல்லவன் வாழ்வானிலும், ‘தங்கக் கிளியே மொழி பேசு ...’ வீரக்கனல், ‘செங்கனிவாய் திறந்து சிரித்திடுவாய் .....’இது, யானைப் பாகனில்.. தத்துவப் பாடலாய் ,’ உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதேங்கே சொல் என் தோழா.....’ மன்னாதி மன்னன்.; ’சமரசம் உலாவும் இடமே...’ ரம்பையின் காதல். ‘சிரிப்பவர் சில பேர் அழுபவர் பல பேர்....‘ சபாஷ் மாப்பிள்ளே, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ’நீர்க்குமிழியை மறக்க முடியுமா....! நாட்டுப் பாடல்களை திரையில் இவர் பாடிய, ‘ ஆத்துல தண்ணி வர அதில் ஒருவன் மீன் பிடிக்க, ,காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக் கொண்டு போவதும் ஏன் கண்ணம்மா! ...வண்ணக் கிளியிலும், ‘பட்டணந்தான் போகலாமடி... ’எங்க வீட்டு மகாலக்ஷ்மியில் பாடிக் களித்தவர். ‘கண்ணே வண்ணப் பசுங்கிளியே .,கண்ணே என் தாரகையே கண்ணு றங்காயோ....’யானை வளர்த்த வானம பாடி ...நெஞ்சை இன்னும் தாலாட்டுகிறது. அறுபடை வீடு கொண்ட.....முருகனைத் தொடர்ந்து , கர்ணனைக் கொன்ற பாவியாய் கண்ணபிரானை மனம் உருகி பாட செய்த,’உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது...... இவர் பாடல்களை கேட்பவர்க் கெல்லாம் விளங்கும். ‘தொட்ட இடம் துலங்க வரும் தாய்க் குலமே வருக......பாடல், ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி......இவர்தம் பாடல் மனதில் நிழலாடாத நெஞ்சமில்லை.
 நன்றி: tamilenkalmoossu.blogspot.in 

தமிழின் இனிமையை கூட்டும் பாடல் வரிகள்.

திரைப் படம்: வீரக் கனல்
பாடியவர்கள்:சீர்காழி கோவிந்தராஜன், P சுசீலா
இசை: K V மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெமினி, அஞ்சலி தேவி
இயக்கம்: G K ராமு












தங்கக் கிளியே மொழி பேசு
சர்க்கரை இதழால் கவி பாடு
தங்கக் கிளியே மொழி பேசு
சர்க்கரை இதழால் கவி பாடு
தங்கக் கிளியே மொழி பேசு

சிங்கத் தமிழன் மார்பினிலே
சிரிக்கும் மயிலே விளையாடு
சிங்கத் தமிழன் மார்பினிலே
சிரிக்கும் மயிலே விளையாடு
சிங்கத் தமிழன் மார்பினிலே

வேலில் வடித்த கண்ணாலே
மேனியில் வளரும் கலையாலே
வேலில் வடித்த கண்ணாலே
மேனியில் வளரும் கலையாலே
பாலில் பிழிந்த சொல்லாலே
பருவம் பொங்கும் சிலை போலே
தங்கக் கிளியே மொழி பேசு

அணைக்கும் காதல் கைகளிலே
அன்னக் கொடி போல் உறவாடு
அணைக்கும் காதல் கைகளிலே
அன்னக் கொடி போல் உறவாடு
படைகளை வென்ற தோள்களிலே
பறவையைப் போல இசை பாடு 
சிங்கத் தமிழன் மார்பினிலே
சிரிக்கும் மயிலே விளையாடு
சிங்கத் தமிழன் மார்பினிலே

கன்னம் என்பது பழத் தோட்டம்
கண்ணும் முகமும் மலர் தோட்டம்
கன்னம் என்பது பழத் தோட்டம்
கண்ணும் முகமும் மலர் தோட்டம்
மின்னும் கனியிதழ் சிந்தும் புன்னகை
அன்பெனும் காதல் சுவையூட்டும் 
தங்கக் கிளியே மொழி பேசு

அன்று கலந்தோம் கரையினிலே
இன்று கலந்தோம் உயிரினிலே
அன்று கலந்தோம் கரையினிலே
இன்று கலந்தோம் உயிரினிலே
இன்பக் கடலில் அன்புப் படகில்
என்றும் வாழ்வோம் உலகினிலே
தங்கக் கிளியே மொழி பேசு
சர்க்கரை இதழால் கவி பாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக