பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 15 மார்ச், 2015

ஓடி விளையாடு பாப்பா...Odi vilaiyadu pappa..

அப்பப்பா என்ன ஒரு பாடல். உண்மையான அக்கறையுடன். அந்தப் பாடலுக்கு நடித்திருக்கும் இவர்களும் குரல் கொடுத்திருக்கும் சீர்காழியும் இசையும் மனதை நிகழச் செய்கிறது. இன்றைக்கேல்லாம் எது இது போல பாடல்கள்?

திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன் (1961)
இசை: G ராமநாதன்
இயக்கம்: B R பந்துலு
நடிப்பு: சிவாஜி, பத்மினி, ஜெமினி
பாடல்: சுப்ரமணிய பாரதியார்
பாடியவர்: சீர்காழி S கோவிந்தராஜன்













ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே
பாப்பா சின்னஞ் சிறுகுருவி போலே
நீ திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு
நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா
கொத்தித் திரியுமந்தக் கோழி
அதைக் கூட்டி விளையாடு பாப்பா
எத்தித் திருடுமந்தக் காக்காய்
அதற்க் கிரக்க படவேணும் பாப்பா
பாலைப் பொழிந்துதரும் பாப்பா
அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்துவரும் நாய்தான்
அது மனிதருக்குத் தோழனடி பாப்பா
வண்டி இழுக்கும் நல்ல குதிரை
நெல்லு வயலில் உழுதுவரும் மாடு
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு
இவை ஆதரிக்க வேணுமடி பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு
என்று வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா
பொய்சொல்லக் கூடாது பாப்பா
என்றும் புறஞ் சொல்லலாகாது பாப்பா
தெய்வம் நமக்குத்துணை பாப்பா
ஒரு தீங்குவர மாட்டாது பாப்பா
பாதகஞ் செய்பவரைக் கண்டால்
நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
துன்பம் நெருங்கிவந்த போதும்
நாம் சோர்ந்துவிட லாகாது பாப்பா
அன்பு மிகுந்ததெய்வ முண்டு
துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா
தாய் சொன்ன சொல்லைத்தட்டாதே பாப்பா
தேம்பி யழுங்குழந்தை நொண்டி
நீ திடங்கொண்டு போராடு பாப்பா
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற
எங்கள் தாயென்று கும்பிடடி பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா
நம் ஆன்றோர்கள் தேசமடி பாப்பா
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
அதை தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்த இந்துத்தானம்
அதை தினமும் புகழ்ந்திடடி பாப்பா
வடக்கில் இமயமலை பாப்பா
தெற்கில் வாழும் குமரிமுனை பாப்பா
கிடக்கும் பெரிய கடல் கண்டாய்
இதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா
வேத முடையதிந்த நாடு
நல்ல வீரர் பிறந்ததிந்த நாடு
சேதமில்லாத இந்துத்தானம்
இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா
சாதிகள் இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி, உயர்ந்தமதி, கல்வி
அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்
உயிர்களிடத்தில் அன்பு வேணும்
தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்
வைரமுடைய நெஞ்சு வேணும்
இது வாழும் முறைமையடி பாப்பா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக