பின்பற்றுபவர்கள்

திங்கள், 6 அக்டோபர், 2014

பூந்தளிர் ஆட பொன் மலர் சூட poonthalir aada pon malar

ஒரு ஆங்கிலப் படத்தின் தழுவலான இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் இளையராஜாவால் பெருமை அடைந்தன. இனிமையான பல பாடல்களில் இது மிகவும் அருமை.


திரைப் படம்: பன்னீர் புஷ்பங்கள் (1981)
பாடும் குரல்கள்: எஸ் பி பி, S ஜானகி
இசை: இளையராஜா
நடிப்பு: சுரேஷ், சாந்தி கிருஷ்ணா
பாடல்: கங்கை அமரன்
இயக்கம்: பாரதி-வாசு










ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பூந்தளிர் ஆட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பொன் மலர் சூட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பூந்தளிர் ஆட
பொன் மலர் சூட
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும்
புது ராகங்கள்
இனி நாளும்
சுப காலங்கள்
பூந்தளிர் ஆட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பொன் மலர் சூட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ல ல ல ல ல ல
காதலை ஏற்றும்
காலையின் காற்றும்
நீரைத்தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில்
வாசனை பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சில் எண்ணம் சுட்டதே

கோடிகளாசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே
கோலமிட்டதே

தேடிடுதே பெண் பாட்டின் ராகம்

பூந்தளிர் ஆட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பொன் மலர் சூட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்ம்

பூ மலர் தூவும் 
பூ மரம் நாளும்
போதை கொண்டு
பூமி தன்னை பூஜை செய்யுதே
பூ விரலாலும் பொன்னிதழாலும்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே

பூ மழை தூவும் புண்ணிய மேகம்
பொன்னை அள்ளுதே
வண்ணம் நெய்யுதே

ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்

பூந்தளிர் ஆட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பொன் மலர் சூட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சிந்தும் பனி வாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும்
புது ராகங்கள்
இனி நாளும்
சுப காலங்கள்

பாடும்
புது ராகங்கள்
இனி நாளும்
சுப காலங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக