பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையை புடிச்சான் antha mappillai kaathalichan kaiyai

எம் ஜி யார் நடனம் ஆடிய மிக சில பாடல்களில் இதுவும் ஒன்று. மிகவும் பழைய (மதுரை வீரன் போன்ற படங்கள்) படங்களில் பிரமாதமாக நடனமாடியிருக்கிறார். ஆனாலும் அரசியலுக்கு வந்த பின் சில பாடல்களில் மேலோட்டமாக நடனம் ஆடியிருப்பார்.


திரைப்படம்: பணம் படைத்தவன்(1965)
இயக்கம்: T R ராமண்ணா
இசை: M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: எம் ஜி யார், K R விஜயா
பாடல்: வாலி
குரல்கள்: டி எம் எஸ், P சுசீலா










ஓ ஓ ஓ ஓ ஓ
ம் ம் ம் ம் ம் ம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

அந்த மாப்பிள்ளை காதலிச்சான்

கையை புடிச்சான்

என்னை கையை புடிச்சான்

அங்கே முன்னால் நின்றேன்

பின்னால் சென்றேன்

வா வா என்றான்

கூடவே வா வா என்றான்


அந்த மாப்பிள்ளை காதலிச்சான்

கையை புடிச்சான்

என்னை கையை புடிச்சான்

அங்கே முன்னால் நின்றேன்

பின்னால் சென்றேன்

வா வா என்றான்

கூடவே வா வா என்றான்


ஊரடங்க காத்திருந்தான்

ஒய்வில்லாம பார்த்திருந்தான்

ஊரடங்க காத்திருந்தான்

ஒய்வில்லாம பார்த்திருந்தான்

பால் பழத்தை வாங்கி வந்தான்

பள்ளியறையின் வாசல் வந்தான்

வெட்கத்திலே நானிருந்தேன்

பக்கத்திலே தானிருந்தான்


அந்த மாப்பிள்ளை காதலிச்சான்

கையை புடிச்சான்

என்னை கையை புடிச்சான்

அங்கே முன்னால் நின்றேன்

பின்னால் சென்றேன்

வா வா என்றான்

கூடவே வா வா என்றான்


கண்ணுரங்க பாய் விரிச்சான்

கொடி இடையில் காய் பறிச்சான்

கண்ணுரங்க பாய் விரிச்சான்

கொடி இடையில் காய் பறிச்சான்

குத்து விளக்கைக் கொரைச்சி வைச்சான்

கொதிச்சிருந்தேன் குளிர வைத்தான்

வெட்கத்திலே நானிருந்தேன்

பக்கத்திலே தானிருந்தான்



ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

மன்னளந்த பார்வை என்ன

மயங்க வைத்த வார்த்தை என்ன

மன்னளந்த பார்வை என்ன

மயங்க வைத்த வார்த்தை என்ன

முத்து நகையின் ஓசை என்ன

மூடி வைத்த ஆசை என்ன

என்னருகே பெண்ணிருந்தா

பெண்ணருகே நானிருந்தேன்


அந்தப் பூங்கொடி பூத்திருந்தா

காத்திருந்தா

என்னை பார்த்திருந்தா

அங்கே கண்ணால் கண்டேன்

பின்னால் சென்றேன்

நீ தான் என்றேன்

வாழ்வே நீ தான் என்றேன்


கையருகில் பாவை வந்தாள்

கண்ணிரண்டில் மாலையிட்டாள்

கையருகில் பாவை வந்தாள்

கண்ணிரண்டில் மாலையிட்டாள்

முல்லை விரிப்பால் வண்ணம் குழைத்தாள்

முத்துச் சிரிப்பால் வாவென்றழைத்தாள்

அம்மம்மா என்ன சொல்ல

அத்தனையும் கண்டதல்ல


அந்தப் பூங்கொடி பூத்திருந்தா

காத்திருந்தா

என்னை பார்த்திருந்தா

அங்கே கண்ணால் கண்டேன்

பின்னால் சென்றேன்

நீ தான் என்றேன்

வாழ்வே நீ தான் என்றேன்



அந்த மாப்பிள்ளை காதலிச்சான்

கையை புடிச்சான்

என்னை கையை புடிச்சான்

அங்கே முன்னால் நின்றேன்

பின்னால் சென்றேன்

வா வா என்றான்

கூடவே வா வா என்றான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக