பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ nilave nee intha seithi sollayo

கருணை, பக்தி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் மாயாமாளவகௌளை ராகத்தில் அமைந்த அருமையான பாடல்.
குழந்தை இல்லாத தம்பதியினருக்கு பாடும் குரலில் அழகாக கொஞ்சமும் உணர்ச்சி குறையாத வகையில் சிறப்பாக பாடியிருக்கிறார்கள். இந்த வகை பாடல்கள் ஒரு Master piece.


திரைப்படம்  : பட்டினத்தார்
இசை: G ராமநாதன்
நடிப்பு: டி எம் எஸ், ஜெமினி சந்திரிகா
பாடியவர்கள்: டி எம் எஸ், P லீலா
இயக்குனர்: K சோமு















நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ
ஆலம் உண்ட திருநீலகண்டனிடம்
ஆலம் உண்ட திருநீலகண்டனிடம்
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ

நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ
நீலவண்ணன் திருமாலின் தங்கையிடம்
நீலவண்ணன் திருமாலின் தங்கையிடம்
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ

கோடி செல்வம் நிறைந்தாலும் என்ன
அதை குலவி கொஞ்ச மனம் குளிர்ந்திடுமோ
கோடி செல்வம் நிறைந்தாலும் என்ன
அதை குலவி கொஞ்ச மனம் குளிர்ந்திடுமோ

ஓடி வந்து விளையாட இங்கு
ஒரு பாலன் வேண்டுமென
வேலன் தந்தையிடம்
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ

சிலைகள் போல இரு சேய்களை ஈன்று
சிந்தை குளிரவில்லையோ
உமையவள் சிந்தை குளிரவில்லையோ
அதுபோல் உலகில் எந்தனது உள்ளம் கனிய
ஒரு பிள்ளை வேண்டுமென
மெல்ல அம்மையிடம்
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ

பக்தியை கெடுத்திடும் பாதகரை வெறுத்து
சினந்திருக்கும் போதிதை சொல்லாமல்
சக்தியாள் உமாதேவியுடன் தமது
புத்திரர்களை வாரி முத்தமிடும் போது
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ

மகவில்லாத இவள் மலடியென்றுலகம்
வசைகள் பேசி என்னை இகழ்ந்திடுமே
என் வகையில் இந்த பாராமுகம் ஏனோ
மர்மமொன்றும் அறியேன்
அன்னையிடம்

நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ
ஆலம் உண்ட திருநீலகண்டனிடம்
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக