பின்பற்றுபவர்கள்

சனி, 30 ஆகஸ்ட், 2014

ஆனந்த வீணை நான் மீட்டும் போது aanantha veenai naan

பாடல் காணொளி கிடைத்திருந்தால் சுகமாக பாடலை அனுபவித்திருக்கலாம்.
நல்லதொரு இன்மையான பாடல். பாடிய இருவருக்கும் இனிமையான இளமைக் குரல்கள்.


இசை: ரமேஷ் நாயுடு (1978)
திரைப் படம்: மேள தாளங்கள்
குரல்கள்: எஸ் பி பி, எஸ்.ஜானகி
இயக்கம்: K சொர்ணம் 
நடிப்பு: ஜெய்ஷங்கர், ஸ்ரீபிரியா.
பாடல்: கண்ணதாசன் 
 
 








ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே ஹே
தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே ஹே ஹே
 
ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே
தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே ஹே
அஹா ஹா 

ஆஹா அஹா ஹா
லலா லா 

லாலா லல லா
 
நடை செல்ல செல்ல செல்ல 
இடை பட்ட பாடு  

ஆ ஆ
நடை செல்ல செல்ல செல்ல 
இடை பட்ட பாடு
அடி எந்தன் கண்ணே 
கொஞ்சும் தமிழ்ப்பாட்டு பாடு
 
மதனெனும் ரதியென இருவர் உலாவ
மறைந்திருந்தே சில கண்மலர் தூவ
சரம் சரம் என வரும் சுகங்கள் கொண்டாட
சந்தோஷ பாட்டுக்கு தாளங்கள் போட
 
ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே ஹே
தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே ஹே
அஹா ஹா 

ஆஹா அஹா ஹா
ஒஹோ ஹோ 

லாலா லல லா
 
இலை மறைந்தே இருக்கும் 
கனிகளை போலே  

ஆ ஆ
இலை மறைந்தே இருக்கும் 
கனிகளை போலே
இளமை மறைந்திருந்து துடிப்பதனாலே
 
புதுப்புது உலகங்கள் 
போய் வருகின்றோம்
பொங்கிய கங்கையில் 
நீராடுகின்றோம்
அதிசய சுகத்துக்கு 
அடிக்கல் எடுத்தோம்
அம்மாடி ஆயிரம் 
பாடங்கள் படித்தோம்
 
ஆனந்த வீணை நான் மீட்டும் போது
அமுதூறும் சுகம் ராகமே ஹே ஹே
தேன் சிந்தும் முல்லை செவ்வாயின் ஓரம்
விளையாடும் கலை மோகமே ஹே
 
அஹா ஹா 

லாலா லல லா
லலா லா 

ஆஹா அஹா ஹா
லலா லா 

ஆஹா அஹா ஹா
அஹா ஹா 

லாலா லல லா

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

நிலவோடு வான்முகில் விளையாடுதே nilavodu vaan mugil

இயற்கையில் எவ்வுயிரும் தனித்தியங்குவதில்லை, இயங்கவும் இயலாது. ஓருயிர் மற்றோருயிரைச் சார்ந்தே இயங்குகின்றது. ஓருயிர் மற்றோருயிரை உணவாக உட்கொள்கிறது. அவ்வுணவைப் பிரிதோருயிருடன் பகிர்ந்து உண்கிறது. அது போலவே ஐம்புலன்களாலும் ஓருயிர் அனுபவிக்கும் சுகங்கள், துயர்கள் அனைத்தும் பிற உயிர்களுடன் சேர்ந்தே அனுபவிப்பது சாத்தியமாகும். புலன்களுக்கப்பால் அப்புலன்களை இயக்கக்கூடிய மனம் சார்ந்த இன்ப துன்பங்களையும் பிற உயிர்களுடன் கலந்து கூடியே அனுபவிக்கலாகும். தனக்காக மட்டும் எவரும் வாழ்தல் சாத்தியமன்று. அனைவரும் வெறுத்தொதுக்கத்தக்க குற்றவாளிகளுக்கும் பிரியமானவர்கள் உலகத்தில் 
இருந்தே தீருவர். இது உலக நியதி.

இந்நியதிப்படியே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவர் மேல் ஒருவர் கொள்ளும் காதலும் நிலைபெறுகிறது. ஒருவரது துணையை மற்றவர் மனம் நாடுகின்றது. தன் துணைவர் அருகில் இல்லாத நேரங்களில் மனம் மிகவும் அல்லல் படுகின்றது, படுத்துகின்றது. இயற்கையில் இவ்வுலகின் ஒப்பற்ற அழகுக்கு சிகரம் வைத்தாற் போன்று விளங்கும் வெண்ணிலாவுடன் விண்ணிற் பரவிப் பரந்து, பிரிந்தொன்று சேர்ந்து பல விதமாய்த் தோற்றமளிக்கும் மேகம் விளையாடுகின்ற விளையாட்டு கண்களுக்கும் மனதுக்கும் மிக இனிதாகத் தோன்றுகின்றது. நிலாவை சில காலம் மறைத்தும், சில காலம் வெளியே காண்பித்தும் என அம்மேகம் விளையாடும் கண்ணாமூச்சி ஒருவரைத் தன் காதல் துணையின் பால் நாட்டம் கொள்ளச் செய்வதில் வியப்பேதுமில்லையன்றோ?
நன்றி:
http://www.thamizhisai.com/












திரைப்படம்: ராஜ ராஜன் (1957)
இயற்றியவர்: கு.ச. கிருஷ்ணமூர்த்தி
இசை: கே.வி. மகாதேவன்
குரல்கள்: சீர்காழி கோவிந்தராஜன், ஏ.பி. கோமளா
இயக்குனர்: T V சுந்தரம்
நடிப்பு: எம் ஜி யார், பத்மினி

நிலவோடு வான்முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான்முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான்முகில் விளையாடுதே 

எழில் மேவும் கண்கள் என் மேல் வலை வீசுதே
எழில் மேவும் கண்கள் என் மேல் வலை வீசுதே
இனிதாகவே இன்பக் கதை பேசுதே
இனிதாகவே இன்பக் கதை பேசுதே 

நிலவோடு வான்முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான்முகில் விளையாடுதே 

புதுப் பாதை தனைக் காண மனம் நாடுதே
உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே
புதுப் பாதை தனைக் காண மனம் நாடுதே
உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே

மதுவுண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா
மதுவுண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
மனம் நோக மலரே உன் இதழ் மூடுமா

இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
எந்நாளும் பிரியாத நிலை காணுவோம்
இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
எந்நாளும் பிரியாத நிலை காணுவோம்
ஓ 

நிலவோடு வான்முகில் விளையாடுதே
அந்தநிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான்முகில் விளையாடுதே

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

தலையைக் குனியும் தாமரையே

எஸ் பி பியுடன் ராஜேஸ்வரியின் குரல் நல்ல தேர்வு. கர்நாடக இசை பின்னணியில் எஸ் பி பியின் வழக்கமான touch உடன் இனிமையான பாடல்.
காட்சி சற்று அமெசூர்த்தனமாக இருந்தாலும், இளமை கொலுவிருக்கும் பாடல்.


திரைப் படம்: ஒரு ஓடை நதியாகிறது (1983)
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ்  ராஜேஸ்வரி 
வரிகள்: வைரமுத்து 
இசை: இளையராஜா 
இயக்கம்: C V ஸ்ரீதர் 
நடிப்பு: ரகுவரன், சுமலதா.











தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே 
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து 
தலையைக் குனியும் தாமரையே 

நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம் 
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம் 

பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம் 
பாற்கடலின் ஓரம் பந்தி வைக்கும் நேரம் 
அமுதம் வழியும் இதழைத் துடைத்து 
விடியும் வரையில் விருந்து நடத்து 

தலையைக் குனியும் தாமரை நான்
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து  

தலையைக் குனியும் தாமரையே

காத்திருந்தேன் அன்பே
இனிக்  காமனின் வீதியில் தேர் வருமோ 

பூமகள் கன்னங்கள்
இனி மாதுளை போல் நிறம் மாறிடுமோ 

ஆயிரம் நாணங்கள்
இந்த ஊமையின் வீணையில் இசை வருமா 

நீயொரு பொன்வீணை
அதில் நுனிவிரல் தொடுகையில் பல சுரமா 


பூவில் நுகர்ந்தது முதல்முறையா 

ம் ம் ம் ம் ம் 

வேதனை வேலையில் சோதனையா 

புது முறையா
இது சரியா 
 
சரி சரி பூவாடைக் காற்று 
ஜன்னலை சாத்து 
 
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 

பூவாடைக் காற்று 
ஜன்னலை சாத்து
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி
உத்தரவு தேவி தத்தளிக்கும் ஆவி

இரண்டு நதிகள் இணைந்து நடக்கும் 
புதிய அலைகள் கரையை உடைக்கும் 

தலையைக் குனியும் தாமரையே
தலையைக் குனியும் தாமரையே

உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து


தலையைக் குனியும் தாமரையே