பின்பற்றுபவர்கள்

திங்கள், 30 ஜூன், 2014

புன்னகை தவழும் மதி முகமோ



ரம்மியமான பாடல். அமைதியான அழகான பாடல். நல்ல படப் பிடிப்பு. இனிமையான  குரல்கள். தெளிவான கவிதை.



திரைப் படம்: மரகதம் (1959) (கருங்குயில் குன்றத்துக் கொலை)
இசை: S M சுப்பையா நாயுடு.
நடிப்பு: சிவாஜி, பத்மினி
பாடல்: பாபநாசம் சிவன்
இயக்குனர்: S M ஸ்ரீராமுலு நாயுடு
குரல்க்பள்: டி எம் எஸ், ராதா  ஜெயலக்ஷ்மி.















புன்னகை தவழும் மதி முகமோ
புன்னகை தவழும் மதி முகமோ
வெண்ணிலா உமிழும் நிறைமதியோ
புன்னகை தவழும் மதி முகமோ
வெண்ணிலா உமிழும் நிறைமதியோ
மதி மயக்கும் ! புன்னகை தவழும் மதி முகமோ

என்னுளம் கவர் வேதன் கைவரிசையோ
என்னுளம் கவர் வேதன் கைவரிசையோ
எழில் அன்னை பரிசோ பல் வரிசையோ
எழில் அன்னை பரிசோ பல் வரிசையோ
புன்னகை தவழும் மதி முகமோ

எனதுள்ளம் இன்றென்னவோ
தனியே இன்புற்று அலைகின்றதே
எனதுள்ளம் இன்றென்னவோ
தனியே இன்புற்று அலைகின்றதே
தினமுள்ள மலர்சோலையே இதைக்கண்டு
சிந்தை சுழல்கின்றதே
தினமுள்ள மலர்சோலையே இதைக்கண்டு
சிந்தை சுழல்கின்றதே
மனமிங்கு விளையாடலை
விரும்பாமல் தனிமையே வேண்டுதடி
மனமிங்கு விளையாடலை
விரும்பாமல் தனிமையை வேண்டுதடி
கனவில் நடப்பது போல்
காண்பதெல்லாம் கணத்தில் மறையுதடி
கனவில் நடப்பது போல்
காண்பதெல்லாம் கணத்தில் மறையுதடி
என் பாங்கி ! கணத்தில் மறையுதடி
பாங்கியே நீ விரைந்து வாராயடி
இந்த விந்தையை பாராயடி
பாங்கியே நீ விரைந்து வாராயடி
இந்த விந்தையை பாராயடி
எந்தன் வடிவம் தனை வரைந்ததாரோ
எந்தன் வடிவம் தனை வரைந்ததாரோ ?
இதைக் கண்டடென் மனமே மயங்குதடி
எந்தன் வடிவம் தனை வரைந்ததாரோ
இதைக் கண்டென் மனமே மயங்குதடி

எனதுள்ளம் இன்றென்னவோ
தனியே இன்புற்று அலைகின்றதே
எனதுள்ளம் இன்றென்னவோ
தனியே இன்புற்று அலைகின்றதே
தினமுள்ள மலர்சோலையே இதைக்கண்டு
சிந்தை சுழல்கின்றதே
தினமுள்ள மலர்சோலையே இதைக்கண்டு
சிந்தை சுழல்கின்றதே
மனமிங்கு விளையாடலை
விரும்பாமல் தனிமையை வேண்டுதடா
மனமிங்கு விளையாடலை
விரும்பாமல் தனிமையே வேண்டுதடா
கனவில் நடப்பது போல்
காண்பதெல்லாம் கணத்தில் மறையுதடா
கனவில் நடப்பது போல்
காண்பதெல்லாம் கணத்தில் மறையுதடா

இந்த ஓவியம் நீங்கள் வரைந்ததுதானே ?
ஆம் ஏன் ? இதில் ஏதாவது பிழை?
இல்லை இல்லை ..என்னை ஒருமுறைதானே பார்த்தீர்கள்?
அதை வைத்துகொண்டு என்னைப் போலவே எப்படி வரைய முடிந்தது ?
கடவுளை கண்ணால் கண்டவர்கள் கூட மறந்து விடுவார்கள்
ஆனால் இந்த அழகு திருவுருவத்தை ஒருமுறை கண்ணால் பார்த்துவிட்டால்
ஆயுள் உள்ளவரை மறக்க முடியுமா?

பார்க்க பார்க்க திகட்டாத உன் அழகை பருக பசி தீருமே
பார்க்க பார்க்க திகட்டாத உன் அழகை பருக பசி தீருமே
கேட்க கேட்க அலுக்காத உந்தன் உயர் கீதம் அமுதம் நேருமே
கேட்க கேட்க அலுக்காத உந்தன் உயர் கீதம் அமுதம் நேருமே
பாவை உன்னை ! பார்க்க பார்க்க திகட்டாத உன் அழகை பருக பசி தீருமே !



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக