பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 7 ஜனவரி, 2014

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்

தெலுங்கிலிருந்து இறக்குமதியான படமும் இசையும்.என்று நினைக்கிறேன். பாடலின் ஆரம்பத்தில் எஸ் பி பியின் குரல் போலவே தெரியவில்லை. அழகானபாடல்.


திரைப்படம்: கிழக்கே ஒரு காதல் பாட்டு (1992)
பாடியவர்கள்: எஸ் பி பி, K சித்ரா
நடிப்பு: ஆனந்த், ரஞ்சிதா.
இசை: வித்யாசாகர்

http://asoktamil.opendrive.com/files/Nl8yODcyNzM1MF9OcXlSUF9jMWRk/Raagam%20thaalam%20iruvarin%20thegam.mp3



ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்
ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்

பெண்மகள் தங்க மேனி சந்தனம்
தந்தேன் உந்தன் சீதனம்

பெண்மை ஒன்றுதான் தெய்வீகம்

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்

இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்

ல ல ல ல ல ல லாலா 
ல லாலா லலல லல 
ந ந ந ந ந ந ந 

எத்தனை இரவு கனவு வந்தது
இன்று கண்டது பொய் இல்லை

பந்தி வைக்கவே ஆசை உள்ளது
பரம்பரை நாணம் விடவில்லை

கட்டிலில் மெத்தையில் இன்பமென்ற சொந்தம்
சேவல்கள் கூவியும் விலகிடாத பந்தம்

மரம் மீது பறவை ஆவோமா

சிறகோடு வானம் போவோமா

நீல வானில் பாடல் பாடி நிலவை தேடி போவோம்

கோடை காலம் போன பின்பு மீண்டும் மண்ணில் சேர்வோம்

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்

காதல் என்னுமோர் புதிய பள்ளியில் உந்தன் மாணவி ஆனேனே

காமன் என்பவன் நமது பள்ளியில் பாடம் கேட்கிறான் பெண் மானே

நீரிலே நீர்த்துளி சங்கமிக்கும் வேளை
ஆயிரம் பூ விடும் பெண்மை என்ற சாலை

நான் என்ற வார்த்தை முடியட்டுமே

நாம் என்ற வார்த்தை தொடங்கட்டுமே

மாரிகாலம் போன பின்பு பூமி எங்கும் பூக்கள்

எந்தன் வாழ்வில் காண வேண்டும் ஈரமான நாட்கள்

ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்

பெண்மகள் தங்க மேனி சந்தனம்
தந்தேன் உந்தன் சீதனம்

பெண்மை ஒன்றுதான் தெய்வீகம்

ஆ ஆ ஆ

ராகம் தாளம் 

இருவரின் தேகம் ஆகும்

இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக