பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 8 டிசம்பர், 2013

தேவார பாட்டும் தேன் ஊரும் இசையும்

இந்தப் பாடலின் காணொளி கிடைக்கவில்லை. படமே வெளியிடப்  படவில்லையா என்பதும் தெரியவில்லை. ஆனால் நல்ல பாடல்.

திரைப் படம்: தாளம் தவறிய ராகம் (வருடம்?)
இசை: M S விஸ்வனாதன் -- சந்தேகம்???
பாடல்: எழுதியவர் தெரியவில்லை
பாடியவர்கள்:S P பாலசுப்ரமண்யம், வாணி ஜெயராம்
இயக்கம்:தெரியவில்லை
நடிப்பு:தெரியவில்லை


http://asoktamil.opendrive.com/files/Nl8yNjkxMjczN19mZm1JZF83MjBj/Thevaara%20PaattumThenoorum.mp3





தேவாரப்பாட்டும் தேனூறும் இசையும்
பூந்தென்றல் காற்று பாடும் இங்கே


தேவாரப்பாட்டும் தேனூறும் இசையும்
பூந்தென்றல் காற்று பாடும் இங்கே


இசை மேளங்களும் சுக நாதங்களும்
இனி நாள்தோறும் நாம் கேட்கவேண்டும் இங்கே


தேவாரப்பாட்டும் தேனூறும் இசையும்
பூந்தென்றல் காற்று பாடும் இங்கே


ஒரு கண்ணில் நாணம் மறு கண்ணில் மோகம்
போராட வந்தால் என்ன சொல்ல


இருள் நேரத்திலே இதழோரத்திலே
புது சங்கீதம் ஓயாமல் கேட்பதென்ன


கோடைக்குத் தென்றல் வாடைக்குத் தணலாய்
உன் கைகள் தீண்டும் மாயமென்ன


என்ன மாயங்களோ என்ன ஜாலங்களோ
இளம் மங்கைக்கும் என் கைக்கும் தேவை எதோ

தேவாரப்பாட்டும் தேனூறும் இசையும்
பூந்தென்றல் காற்று பாடும் இங்கே


தேனாறு பொங்கும் பூமேனி எங்கும்
ஆனந்த தீர்த்தம் ஆடவந்தேன்


சுவர்க்கலோகங்களே இங்கு வாருங்களேன்
என்று நாள்தோறும் நான் இங்கு பாடவந்தேன்


இளமாலை நேரம் அழகான தேகம்
எங்கெங்கும் கோலம் போடவந்தேன்


உடல் ஒன்றாகவும் உயிர் ஒன்றாகவும்
இன்று உன்னோடு நான் இங்கு கூட வந்தேன்


தேவாரப்பாட்டும் தேனூறும் இசையும்
பூந்தென்றல் காற்று பாடும் இங்கே

இசை மேளங்களும் சுக நாதங்களும்
இனி நாள்தோறும் நாம் கேட்கவேண்டும் இங்கே





 


1 கருத்து:

கருத்துரையிடுக