பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 27 டிசம்பர், 2013

பூங்குயில் ராகமே புதுமலர் வாசமே

நல்ல பாடல். எஸ் பி பி சிறப்பாக பாடியிருப்பார். தகுந்த ஏற்ற இறக்கங்களுடன் காட்சிக்கு ஏற்ற பாடல்.

திரைப் படம்: நான் பேச நினைப்பதெல்லாம் (1993)
பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியன்
இசை: சிற்பி
பாடல்: பழனி பாரதி
நடிப்பு: ஆனந்த் பாபு, மோகினி
இயக்கம்: விக்ரமன்

http://asoktamil.opendrive.com/files/Nl8yODEwMDYzNl9OaEVnUF83MjY0/Poonguyil-Naan%20Pesa%20Nipathellam.mp3






பூங்குயில் ராகமே
புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
பூங்குயில் ராகமே
புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்

கண்மணி கண்மணி
என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி

ஜென்மம் ஜென்மங்கள்
ஒன்றாக நாம் சேரனும்
கண்ணே நான் காணும்
ஆகாயம் நீயாகனும்
என்றும் ஓயாது ஓயாது
உன் ஞாபகம்
நாளும் உன் பார்வை தானே
என் சூரியோதயம்

அன்பே நீ இல்லையேல்
இங்கு நான் இல்லையே
நெஞ்சில் உன் ஆலயம்
நீ என் உயிர் ஓவியம்
சொர்க்கமே வா
செல்வமே வா
ஜீவனே நீ வா வா

பூங்குயில் ராகமே
புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்

இன்று என் பாதை
உன்னாலே பூப்பூத்தது
பூவே உன் கண்ணில்
என் கோயில் தெரிகின்றது
உந்தன் பேர் கூட
சங்கீதம் ஆகின்றது
பொழுது நமக்காக
நமக்காக விடிகின்றது

ஓடும் கங்கை நதி
இல்லை என்றாகலாம்
வானம் நூறாகலாம்
யாவும் பொய்யாகலாம்
உன்னையே தினம் எண்ணிடும்
நம் காதலே என்றும் வாழும்

பூங்குயில் ராகமே
புதுமலர் வாசமே
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்
நாளை நம் வானிலே
நாளும் புது ஊர்வலம்

கண்மணி கண்மணி
என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே

கண்மணி கண்மணி
என் உயிர் கண்மணி
என்றும் உன் மூச்சிலே
வாழும் என் ஜீவனே
கண்மணி கண்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக