பின்பற்றுபவர்கள்

சனி, 21 டிசம்பர், 2013

கொஞ்சுமொழி சொல்லும் கிளியே

இன்று 50/55 வயதை நெருங்கின பலரும் இந்தப் பாடலை தனது சிறிய வயதில் அம்மா பாட கேட்காமல் இருந்திருக்க மாட்டார்கள். தமிழ் சினிமா தாலாட்டுப் பாடல்களில் இது ஒரு அற்புதமான பாடல். பாடலுக்கேற்ற இசை, இது இசைகேற்ப பாடப்படவில்லை என்பது இந்தப் பாடலில் தெளிவாக தெரிகிறது.

ஒவ்வொரு வரியும் முத்து முத்தாக வந்து விழுந்திருக்கிறது. பாரதிதாஸனுடையது அல்லவா?

இன்றைய இளசுகள் இதைக் கேட்டு தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும்.

திரைப் படம்: பராசக்தி (1952)
இயக்குனர்: R கிருஷ்ணன் S பஞ்சு
இசை: R சுதர்சனம்
நடிகர்கள்: சிவாஜி, பண்டரிபாய்,
பாடல் ஆக்கம்: பாரதிதாசன்
பாடியவர்: T S பகவதி

http://asoktamil.opendrive.com/files/Nl8yNzcyNzE0OF8wa3ZTcV8yYjYz/Konjum%20Mozhi%20Sollum.mp3





கொஞ்சுமொழி சொல்லும் கிளியே
செழும் கோமளத்தாமரைப் பூவே 
கொஞ்சுமொழி சொல்லும் கிளியே
செழும் கோமளத்தாமரைப் பூவே
ஒரு வஞ்சமில்லா முழுமதியே
இன்பவானில் உதித்த நல்லமுதே 
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ 
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ 

மாமன்மார் மூவர் தம்பி
நல்ல வாழ்வளிக்க வருவார்
உனக்கு மாமன்மார் மூவர் தம்பி
நல்ல வாழ்வளிக்க வருவார்
உன் மாம்பழக் கன்னத்திலே
முத்த மாரி பொழிந்திட வருவார்
உன் மாம்பழக் கன்னத்திலே
முத்த மாரி பொழிந்திட வருவார் 
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

மாணிக்கப் பாலாடை
பச்சை மாமணித்தொட்டிலுடன் 
மாணிக்கப் பாலாடை
பச்சை மாமணித்தொட்டிலுடன்
வெள்ளை யானையும் வாகனமாய் 
மாமன் தருவார் சீதனமாய் 
உன்தன் மாமன் தருவார் சீதனமாய் 
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

வெள்ளியினால் செய்த ஏட்டில்
நல்ல வைர எழுத்தாணி கொண்டு 
வெள்ளியினால் செய்த ஏட்டில்
நல்ல வைர எழுத்தாணி கொண்டு 
தெள்ளு தமிழ்ப் பாடம் எழுத
உன்னைப் பள்ளியில் சேர்த்திட வருவார்
மாமன் அள்ளி அணைத்திட வருவார் 
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ 
கண்ணே கண்மணியே கண்ணுறங்காயோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக