பின்பற்றுபவர்கள்

திங்கள், 19 ஆகஸ்ட், 2013

பூ பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா

குழந்தைக் குரலில் M S ராஜேஸ்வரி அவர்களின் மற்றும் ஒரு பாடல். குழந்தை மனதின் கேள்விகளை அப்படியே பாடல் வரிகளாக வடித்திருக்கிறார் கவிஞர்.

திரைப் படம்: திக்கு தெரியாத காட்டில் (1972)
இசை:  M S விஸ்வனாதன்
பாடியவர்: M S ராஜேஸ்வரி
பாடல்: மறைந்த திரு வாலி
இயக்கம்: N C சக்கரவர்த்தி
நடிப்பு: முத்துராமன், ஜெயலலிதா

http://asoktamil.opendrive.com/files/Nl8xODc3MDAyNV9LdURsNV8zZmMz/PooPoovaParanthuPogum.mp3





பூ பூவா பறந்து போகும்
பட்டு பூச்சி அக்கா
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா

பூ பூவா பறந்து போகும்
பட்டு பூச்சி அக்கா
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா

குதிச்சு குதிச்சு ஓடிப் போகும்
குள்ள முயல் அண்ணா
நீ குதிக்காதே கொஞ்சம் நில்லு
கூட வரேன் ஒன்னா

பூ பூவா பறந்து போகும்
பட்டு பூச்சி அக்கா
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா

பாவாடை போல் தோகை விரிச்சு
புள்ளி மயில் வாயேன்
என் புத்தகத்திலே குட்டி போடவே
பூஞ்சிறகொன்னு தாயேன்

தாண்டி தாண்டி கிளைக்கு கிளை
தாவி போகும் குரங்கே
நான் பாண்டி ஆடவே
உன்னை வேண்டி கேட்கிறேன்
நீயும் இரங்கி ஓடி வா

பூ பூவா பறந்து போகும்
பட்டு பூச்சி அக்கா
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா

யானைக் குட்டி மாமா நீயும்
தும்பிக்கையை நீட்டு
உன் முதுகின் மேலே குந்திக்க போறேன் 
காட்டை சுத்திக் காட்டு

மான் குட்டியே உன் உடம்பு முழுக்க
புள்ளி வச்சதாரு
நீ துள்ளி ஓடினா நான் துரத்தி பிடிக்கிறேன்
நீயும் ஓடி ஒளிஞ்சுக்கோ

பட்டுச் சிவப்பா மூக்கு இருக்குற
பச்சை கிளியை பாரு
இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது
பழம் பறிச்சுப் போடு

பூச்சி புழுவை கொத்தித் திங்கிற
ஒத்தைக் கண்ணுக் காக்கா
நீ மறைஞ்சி இருக்குற
வடையை திருடி திங்குறே
நாந்தான் பேச மாட்டேன் போ
கா

பூ பூவா பறந்து போகும்
பட்டு பூச்சி அக்கா
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா
 

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்றுமே ரசிக்க வைக்கும் பாடல்...

Raashid Ahamed சொன்னது…

பச்சை குழந்தைக்கும் ஒத்துப்போகும் ஒரு அழகிய குரல் M.S. ராஜேஸ்வரி அம்மாவுக்கு தான் உள்ளது. அவருக்கென இது போல நிறைய பாடல்கள் அமைந்தது ரசிகர்களுக்கு அதிஷ்டம்.

கருத்துரையிடுக