பின்பற்றுபவர்கள்

புதன், 19 ஜூன், 2013

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி

தெளிந்த நீரோடை போல் கருத்துள்ள ஒரு பாடல். இதில் உள்ள எழுத்துக்களின் விளக்கம் நமக்கு எல்லோருக்கும் தெரிந்தே நாம் இன்னமும் இல்லாத இடத்தில் நமக்கான பொருளைத தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். விதி வலியது.

(எனக்கொன்னும் ஆகவில்லை நண்பர்களே....சொன்னால் நம்புங்கள்!!)

நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான்

இவர்கள்தான் இன்றைக்கு  நம் நாட்டில் அதிகம்.


நல்ல, அர்த்தம் பொதிந்த பாடல். சீர்காழியின் கம்பீரமானப் பாடல்.

படம் : திருவருட் செல்வர் (1967)
இசை : K V மஹாதேவன்
பாடியது : சீர்காழி S கோவிந்தராஜன்
நடிப்பு: சிவாஜி, பத்மினி
இயக்கம்: A P  நாகராஜன்
பாடல்: கண்ணதாசன்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMTE2Nzc2OV9hZ2haQ19lMDFk/Irukkumidathai%20vittu.mp3







இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

உன்னையே நினைத்திருப்பான்
உண்மையைத் தான் உரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
உன்னையே நினைத்திருப்பான்
உண்மையைத் தான் உரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து
நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத் தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

தொண்டுக்கென்றே அலைவான்
கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
தொண்டுக்கென்றே அலைவான்
கேலிக்கு ஆளாவான்
கண்டு கொள்வாய் அவனை ஞானத் தங்கமே
அவன் கடவுளின் பாதியடி ஞானத் தங்கமே
ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே

பிள்ளையைக் கிள்ளி  விட்டு
தொட்டிலை ஆட்டிவிட்டு
பிள்ளையைக் கிள்ளி விட்டு
தொட்டிலை ஆட்டிவிட்டு
தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத் தங்கமே
அவன்தான் தரணியைப் படைத்தானடி ஞானத் தங்கமே
ஞானத் தங்கமே

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே


 

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கருத்துள்ள சிறப்பான பாடல்... ஒவ்வொரு வரியைப் பற்றியும் பதிவுகள் எழுதலாம்...

நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக