பின்பற்றுபவர்கள்

திங்கள், 17 ஜூன், 2013

தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்

திரு மருதூர் கோபாலகிருஷ்ணன், சத்யா பாமா ஆகியோருக்கு இலங்கையில் கண்டி அருகே நாவலபட்டியாவில் பிறந்தவர்கள் சக்கர பாணி, ஒரு பெண் குழந்தை மற்றும் எம் ஜி யார். அந்தப் பெண்  குழந்தை  சிறிய  வயதில் இறந்து போனது.

தந்தையார் மாஜிஸ்ட்ரேட் ஆக வேலை செய்தவர்.
அவரது இறப்புக்குப பின் சொந்த ஊரான கேரளாவில் அவரது தந்தையின் இன்னொரு மனைவியுடன் தங்க வந்தார்கள். அங்கே அவரது கொடுமை தாங்காமல், ரங்கூன் சென்றார்கள். பின்னர் தமிழ் நாட்டில் ஈரோடில் வந்து குடியிருந்தார்கள். அங்கிருந்து விரைவில் கும்ப கோணம் சென்றார்கள். அங்கே ஏழ்மை காரணமாக மூவரும் அங்கே இயங்கிக் கொண்டிருந்த நாடக ட்ரூப்பில் சேர்ந்தார்கள்.

M G R க்கு திரைப் பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின. பார்கவி என்ற பெண்ணை மணந்தார். அவர் 3 மாதங்களில் நோய்வாய்பட்டு இறந்தார். பின்னர் சதானந்தவதியை மணந்தார். அவரும் விரைவில் இறந்தார்.

பின்னர் அவரது வாழ்வில் வந்தவர் V N ஜானகி. இவர் தனது முந்தய கணவரை விலக்காமல் (கணபதி பட்) M G Rய் மணந்தார் என்கிறார்கள்.

பின்னர் M G R வாழ்க்கை வரலாறு பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

இதுவரை நான் கூறிய M G R இன் வரலாறும் எந்த அளவுக்கு சரியானது என்பது எனக்குத் தெரியாது. இது எம் ஜி யாரின்  பேரன் M G C B பிரதீப்  அவரது  இணைய  தளத்தில் ஆங்கிலத்தில் உள்ளதின்
தமிழாக்கம்.  ஏதாவது தவறு இருப்பின் அவரைப் பற்றிய முழு விபரம் தெரிந்தவர்கள் என்னை மன்னிப்பார்களாக.

நன்றி: M G R பேரன் M G C B Pratheeb.-mgrperan.blogspot.com

padagoti_reserve


 M G R காதல் வாகனம் என்ற திரைப் படத்தில்.

M G R அவர்களின் முதல் மனைவி தங்கமணி பார்கவி

MGR அவர்களின் அட்டகாசமானப் பாடல்களில் ஒன்று.
இசை, பாடும் குரல்கள், நடிப்பு, பாடல் வரிகள், பட பிடிப்பு, கலர், நடன அமைப்பு என எதிலும் குறை சொல்ல முடியாத ஒரு பாடல்.

"ஆயிரம் சுகமல்லவா
ஹோய்
ஆயிரம் சுகமல்லவா" எனச் சொல்ல வைக்கும் பாடல்.

திரைப் படம்: படகோட்டி (1964)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: வாலி
பாடியவர்கள்: டி எம் எஸ், P சுசீலா
நடிப்பு: எம் ஜி யார், சரோஜா தேவி
இயக்கம்: T பிரகாஷ்ராவ்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDczMjk0N19oeTEza184YTFj/thottal%20poo%20malarum.mp3





தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

கண்கள் படாமல் கைகள் தொடாமல்
காதல் வருவதில்லை

நேரில் வராமல் நெஞ்சைத் தராமல்
ஆசை விடுவதில்லை
ஹோய்
ஆசை விடுவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

இருவர் ஒன்றானால்
ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை
ஹோய்
இளமை முடிவதில்லை

எடுத்துக்கொண்டாலும்
கொடுத்துச் சென்றாலும்
பொழுதும் விடிவதில்லை
ஹோய்
பொழுதும் விடிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பக்கம் நில்லாமல்
பார்த்து செல்லாமல்
பித்தம் தெளிவதில்லை
ஹோய்
பித்தம் தெளிவதில்லை

வெட்கமில்லாமல்
வழங்கி செல்லாமல்
சுவர்க்கம் தெரிவதில்லை
ஹோய்
சுவர்க்கம் தெரிவதில்லை

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

பழரசத் தோட்டம்
பனிமலர்க் கூட்டம்
பாவை முகமல்லவா
ஹோய்
பாவை முகமல்லவா

அழகிய தோள்கள்
பழகிய நாட்கள்
ஆயிரம் சுகமல்லவா
ஹோய்
ஆயிரம் சுகமல்லவா

தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன்

ஆஹா ஹா ஆஹா ஹா  ஆஹா ஹா
ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹ ஹ ஹ ஹா 

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தகவல்களுடன் என்றும் இனிக்கும் பாடல்... நன்றி...

கருத்துரையிடுக