பின்பற்றுபவர்கள்

சனி, 12 ஜனவரி, 2013

என்னைத் தொட்டு சென்றன கண்கள்

பாடலின் ஆரம்ப இசையில் ஆரம்பித்து பாடல் இறுதி வரை இசை இன்பம்தான். கவிஞரும், பாடும் குரல்களும்  தன் பங்கிற்கு இனிமை சேர்த்திருக்கிறார்கள்.

திரைப் படம்: பார் மகளே பார் (1963)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், P சுசீலா
இயக்கம்: A பீம்சிங்க்
நடிப்பு: சிவாஜி,  சௌகார் ஜானகி,  விஜயகுமாரி, முத்துராமன்












என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

முள்ளில் நிறுத்தி போனது வெட்கம்

முத்து சரமே வா இந்த பக்கம்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

ஹா ஹா தாழை மடல் சுற்றும் காற்றைக் கண்டேன்

ஹோ ஹோ தள்ளாடி உள்ளத்தை தழுவக் கண்டேன்

எந்தன் வாழை உடல் சற்று வாடக் கண்டேன்

வாவென்று நீ சொல்ல மாற்றம் கண்டேன்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

ஹா ஹா வஞ்சி நடை சற்று அஞ்சக் கண்டேன்

ஹோ ஹோ வண்ணக் கனி இதழ் கொஞ்சக் கண்டேன்

ஹா ஹா பிஞ்சுக் கொடியிடை கெஞ்சக் கண்டேன்

பெண்ணுக்குள் மண்ணோடு விண்ணைக் கண்டேன்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

ஹா ஹா ஹா ஹா ஹா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஹா ஹா மாலைக்கு மாலை மாயம் கண்டோம்

ஹோ ஹோ வயதுக்கும் மனதுக்கும் நியாயம் கண்டோம்

ஹோ ஹோ சோலைக் கிளி என்று மாறுகின்றோம்

சொல்லுக்கு சொல் இன்று சேருகின்றோம்

என்னைத் தொட்டு சென்றன கண்கள்

ஏக்கம் தந்தே சென்றன கைகள்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

1 கருத்து:

NAGARAJAN சொன்னது…

மிகவும் அருமையான பாடல். படத்தில் இப்பாடல் கிடையாது.

கருத்துரையிடுக