பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 20 ஜனவரி, 2012

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ


இளையராஜாவின் இசை மழையில் ஒரு நினைவு, ஒரு நனைவு. அட்டகாசமான S P B யின் குரல் வளம்.

திரைப் படம்: பயணங்கள் முடிவதில்லை.
நடிப்பு: மோகன், பூர்ணிமா
இயக்கம்: R சுந்தரராஜன்
பாடல்: வைரமுத்து




http://www.divshare.com/download/16583577-523



http://www.divshare.com/download/16583693-5cf

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாலும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

கோலம் போடும் நானங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பௌர்னமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள் ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும்
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும் அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுதாகி
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாலும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

1 கருத்து:

Unknown சொன்னது…

அழகான பாடல் அற்புதமான வரிகள் அசத்தலான இசை இளையராஜாவாள் மட்டுமேமுடியும்

கருத்துரையிடுக