பின்பற்றுபவர்கள்

திங்கள், 26 டிசம்பர், 2011

பூந்தென்றலே நீ பாடி வா பொன் மேடையில் பூ சூட வா

இந்தப் பாடலையும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் சோக கீதமாக சித்ரா குரலில் தந்துவிட்டார்.
இரண்டு பாடல்களும் இங்கே.

திரைப் படம்: மனசுக்குள் மத்தாப்பூ (1988)
இசை: S A ராஜ்குமார்
பாடியவர்கள்: ஜெயசந்திரன், சித்ரா
இயக்கம்: ராபட் ராஜசேகர்
நடிப்பு: பிரபு, சரன்யா






















ம் ம் ம் ம் ம்
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூ சூட வா
கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்
கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூ சூட வா

தூங்காத கண்களால் நீங்காமல் காண்கிறேன்
நீதானே என் காலைகளின் சூர்யோதயம்
தாங்காமல் பெண் நிலை தாலாட்டு கேட்கிறேன்
நீயில்லையேல் பாவை மனம் பாலை வனம்
ஹே ப்ரம்ம தேவா தர வேண்டும் நூறாண்டுகள்
நான் காதல் செய்ய போதாது நூறாண்டுகள்
கண்ணே உன் வாசகம் என் ஜீவ யாசகம்
கண்ணா என் மன்னா நீ கோடி பேரில் மானுடன்

பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூ சூட வா
ம் ம் ம் ம்
ஏன் இந்த பெண் மனம் ஏகாந்தமானது
நீ பாடினால் பூவானது தேனானது
நீ வந்து காவியம் நிஜமாகி போனது
வார்தைகளில் தீராதது நாம் கண்டது
பூலோக சொர்க்கம் கண் முன்னே நான் காண்கிறேன்
நீ தேவ வர்க்கம் உன் நெஞ்சில் நான் வாழ்கிறேன்
காலங்கள் மாறினும் தேகங்கள் போயினும்
காதல் அழியாது
அது நாளும் வாழும் உன் வசம்

பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூ சூட வா
கண்ணன் மனம் மங்கை தொழும் தேவாலயம்
கண்ணில் வரும் பெண்ணின் முகம் பிருந்தாவனம்
பூந்தென்றலே நீ பாடி வா
பொன் மேடையில் பூ சூட வா

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ஜெயசந்திரன் பாடிய பாடல்களில் இது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இசையமைப்பு இனிமையாக இருக்கும். பகிர்விற்க்கு நன்றி.

கருத்துரையிடுக