பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 13 டிசம்பர், 2011

சந்தன புன்னகை சிந்திய கன்னிகை மந்திர மல்லிகை தானே


சங்கர் கணேஷ் இரட்டையர்களின் இசை அமைப்பில், அழகான வித்தியாசமான காதல் ரசம் சொட்டும் குரல் வளம் மிக்க நல்ல கவிதைத்துவமான பாடல்.

திரைப் படம்: நாடோடி ராஜா (1982)
இசை: சங்கர் கணேஷ்
இயக்கம்: S M உம்மர்
குரல்கள்: S P B, S ஜானகி
பாடல்: வைரமுத்து
நடிப்பு: ராஜீவ், அருணா



சந்தன புன்னகை
சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்

சந்தன புன்னகை
சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்

சந்தன புன்னகை
சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
ஆ ஆ ஆ

நெஞ்சோரம் இன்னேரம் கள்ளூறும்
இவள் ஒரு தாவணி மேகம்
இதயம் அமுதில் நனையும் தொடுகையில்
நெஞ்சோரம் இன்னேரம் கள்ளூறும்
இவள் ஒரு தாவணி மேகம்
இதயம் அமுதில் நனையும் தொடுகையில்
பார்வை வேறானது
இங்கு வேர்வை ஆறானது
பார்வை வேறானது
இங்கு வேர்வை ஆறானது
சேலை தொடு
மாலை இடு
இளமையில் தூது விடு
காதல்

சந்தன புன்னகை
சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்

சந்தன புன்னகை
சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்

என்னோடு கொண்டாடு பண்பாடு
தினம் தினம் ராத்திரி ராகம்
கரும்பும் இவளை விரும்பும்
கனிரசம்
என்னோடு கொண்டாடு பண்பாடு
தினம் தினம் ராத்திரி ராகம்
கரும்பும் இவளை விரும்பும்
கனிரசம்
நெஞ்சிலோர் வேதனை
இனி தேனில் ஆராதனை
நெஞ்சிலோர் வேதனை
இனி தேனில் ஆராதனை
கூந்தலிலே போர்வையிடு
மன்மத சேதி கொடு
பாடு

சந்தன புன்னகை
சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்
ஆ  ஆ  ஆஹா ஆஹா
சந்தன புன்னகை
சிந்திய கன்னிகை
மந்திர மல்லிகை தானே
தேன்மழை பொழியும்
இதழ்களில் வழியும்
விடிந்ததும் காய்ந்துவிடும்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

இனிமையான பாடல் பகிர்விற்க்கு நன்றி.

கருத்துரையிடுக