பின்பற்றுபவர்கள்

வியாழன், 13 அக்டோபர், 2011

உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன் எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே


திரு கணேஷ் அவர்களின் விருப்பப் பாடல் இது. திரு K J யேசுதாஸின் இனிமையான குரலில் V குமார் அவர்கள் இசையில் அமுதம் பொழிகின்றது.

திரைப் படம்: தேன் சிந்துதே வானம் (1975)
இயக்கம்: R A சங்கரன்
இசை: V குமார்
பாடல்: வாலி
குரல்: K J யேசுதாஸ்
நடிப்பு: கமல் ஹாசன், சிவகுமார், ஜெயசித்ரா



http://www.divshare.com/download/15919280-37a




உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்

வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வையெல்லாம் தெய்வீகம்
பூபாலம் கேட்கும் பொழுதுள்ள வரையில் இன்பங்கள் உருவாகக் காண்போம்
பூபாலம் கேட்கும் பொழுதுள்ள வரையில் இன்பங்கள் உருவாகக் காண்போம்
குரலோசை குயிலோசையென்று மொழிபேசு அழகே நீ இன்று

உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே

தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்
கார்க்காலக் குளிரும் மார்கழிப் பனியும் கண்ணே உன் கைசேரத் தனியும்
கார்க்காலக் குளிரும் மார்கழிப் பனியும் கண்ணே உன் கைசேரத் தனியும்
இரவென்ன பகலென்ன தழுவு இதழோரம் புதுராகம் எழுது

உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்

2 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

ஏசுதாஸின் குரலில் நான் மயங்கிய இப்பாடல் தந்தமைக்கு நன்றி. படம் பெயர், மற்ற விவரங்கள் நீங்கள் எழுதியதிலிருந்து தெரிந்து கொண்டேன். நான் கேட்ட மற்றொரு பாடலான எஸ்.பி.பி. பாடிய பெண்ணைப் படைத்ததும் பிரம்மன்... பாடல் இடம் பெற்ற படம்: நீ சிரித்தால் நான் சிரிப்பேன். மற்ற தகவல் எதுவும் தெரியவில்லை. மீண்டும் மனமார்ந்த நன்றி ஐயா.

பெயரில்லா சொன்னது…

அசோக் ராஜ் அவர்களே

மிக அருமையான பாடல்.
மிக்க நன்றி !

அன்புடன்
தாஸ்

கருத்துரையிடுக