பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

மழைக் கால மேகங்கள் மறைக்காத நேரங்கள்

இசையமைப்பாளர் ஷ்யாம் இசையில் சோக கீதமும் நெஞ்சை நிரடும் இனிமை கீதமாய் ஒலிக்கிறது.

திரைப் படம்: கள் வடியும் பூக்கள் (1983)
இசை: ஷ்யாம்
பாடியவர்: K J Y
பாடல்: வாலி
நடிப்பு: நிழல்கள் ரவி, நளினி
இயக்கம்: V கார்த்திகேயன்













மழைக் கால மேகங்கள்
மறைக்காத நேரங்கள்
நிலா பாடும் ராகங்கள்
நீ கேட்டதில்லையோ

எதிர் பார்க்கும் கண்கள் இங்கே
எனை கொஞ்சும் தென்றல் எங்கே
நினைக்காத பெண்ணை நான்
மறக்காமல் வாழ்கிறேன்

மழைக் கால மேகங்கள்
மறைக்காத நேரங்கள்
நிலா பாடும் ராகங்கள்
நீ கேட்டதில்லையோ

இனிமை  ஈ.......ஈ.....ஈ.......ஈ
அஹா ஆ  அஹாஅ ஆ...அ அஹா
இனிமை
நாம் சேர்ந்த நேரம் இனிமை
தனிமை
நான் வாடவும்
போராடவும் ஏன் வந்ததோ

உனக்காக ஏங்கவோ
உள் மூச்சு வாங்கவோ

உனக்காக ஏங்கவோ
உள் மூச்சு வாங்கவோ

பொழுது நான் பாடினேன்
நீ கேட்கவில்லையோ

மழைகால மேகங்கள்

நிழலோ
நான் வேண்டும் வாழ்க்கை நிஜமோ
நிழலோ
நான் வேண்டும் வாழ்க்கை நிஜமோ
வருமோ என் வானத்தில்
உன்னால் ஒரு அருணோதயம்

நெடுங்காலம் ஆகுமோ
நிறைவேறக் கூடுமோ

நெடுங்காலம் ஆகுமோ
நிறைவேறக் கூடுமோ
விரகத்தில் பாடினேன்
நீ கேட்டதில்லையோ

மழைக் கால மேகங்கள்
மறைக்காத நேரங்கள்
நிலா பாடும் ராகங்கள்
நீ கேட்டதில்லையோ
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக