பின்பற்றுபவர்கள்

புதன், 22 ஜூன், 2011

நேற்று வரை விண்ணில் இருந்தாளோ

சாமுவல் ஜோசஃப் என்கின்ற ஷ்யாம் முதலில் தமிழில் இசையமைத்த பாடல். அவருடைய பாடல்கள் பலவும் சிறந்த பாடல்களே. தொடர்ந்து சில பாடல்களை வழங்க முயற்சிக்கிறேன். இந்த பாடலில் S P B மற்றும் வசந்தா குரல் ரொம்ப இனிமையாக இருக்கிறது.


திரைப் படம்: கருந்தேள் கண்ணாயிரம் (1972)
இயக்கம்: ராம சுந்தரம்
இசை: ஷ்யாம்
நடிப்பு: ஜெயஷங்கர், லக்ஷ்மி



http://www.divshare.com/download/15140811-e49


ஆ ஆ
நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ

ஆ ஹ ஹ ஹ

நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ

அவள் மனம்
ஆ ஆ
அவள் குணம்
ஓ ஓ
நிலாவில் ஊஞ்சலில் ஆடும் நேரமோ
ஆ ஆ

நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
ம் ம்
இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ
ம் ம்

மேகம் போடும் கோடு
அவள் மின்னல் ஆடும் வீடு
தேகம் காட்டும் ஜாடை
அது தெய்வம் தோன்றும் மேடை

மழைத்துளிகள் முத்து முத்தாக விழுவதை போன்ற சிரிப்பு
என் கவிதையின் வடிவம் அவளே

நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ

அவள் மனம்
ஆ ஆ
அவள் குணம்
ஓ ஓ
நிலாவில் ஊஞ்சலில் ஆடும் நேரமோ
ஆ ஆ

நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
ம் ம்
இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ
ம் ம்

கம்பன் பாடும் சீதை
மலர் கண்ணன் பார்த்த ராதை
ஒன்றாய் வந்த கோலம்
அவள் உள்ளம் பிள்ளை போலும்

சிரித்து தண்ணீர் போல் குளிர் காலத்தில் வெப்பமாக இருக்கிறாள்
கோடையில் குளிர்கிறாள்

நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ

அவள் மனம்
ஆ ஆ
அவள் குணம்
ஓ ஓ
நிலாவில் ஊஞ்சலில் ஆடும் நேரமோ
ஆ ஆ

நேற்று வரை விண்ணில் இருந்தாளோ
ம் ம்
இன்று எந்தன் கண்ணில் விழுந்தாளோ
ம் ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக