பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்..

இந்தப் பாடல் 1992 இல் வெளிவந்தாலும் இசை என்னவோ 80 களில் வந்த பாடல்களை ஞாபகபடுத்துகிறது. இனிமையான குரல்களில், மிதமான பின்னனி இசையுடன் பாடல் நெஞ்சை வருடுகிறது.


திரைப் படம்: அன்னை வயல் (1992)
இசை: சிற்பி
குரல்கள்: S P B, S ஜானகி
இயக்கம்: பொன்வண்ணன்
நடிப்பு: ராஜ்முரளி, வினோதினி
பாடல்: பழனி பாரதி



http://www.divshare.com/download/14577673-57a






மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்..
நானும் உனைத் தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே..
ஆசை மணி ஓசையிலே பூக்கும் நிலா கனவுகளை..
உன்னிடத்தில் பேச வந்தேன் பார்வையிலே பார்வையிலே..

மல்லிகை பூவழகில்...
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்..

தேவி பாதை யாவும் திருக் கோயிலாக மாறும்..
பார்வை ஏற்றும் தீபம் உந்தன் வார்த்தை வேதம் ஆகும்..
கண்கள் எழுதும் நாளும் புது காதல் ஓவியம்..
பெண்ணின் நானம் பூசும் அதில் வண்ணம் ஆயிரம்..
கொஞ்சும் மணிச் சந்தம் அது உந்தன் மொழியே..
எந்தன் மனச் சிற்பம் எனக் கொண்டேன் உனையே..
தவித்திடும் தனிமையில் குளித்திடும் மழையினிலே..
ஆசை மணி ஓசையிலே பூக்கும் நிலா கனவுகளை..
உன்னிடத்தில் பேச வந்தேன் பார்வையிலே பார்வையிலே..
மல்லிகை பூவழகில்...
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்..

உந்தன் அழகை பேசும் தென்றல் பூவின் வாசம் வீசும்..
மூங்கில் தோளில் சாயும் தென்றல் ராகமாகி வாழும்..
கலையும் கூந்தல் கோலம் சொல்லும் மோக பூங்கதை..
ஆசை சிறகை தேடும் ஒரு காதல் தேவதை..
சொந்தம் இது சொர்க்கம் என வந்தது அருகே..
சிந்தும் மகரந்தம் இனி எந்தன் வழியே..
நனைந்திடும் தளிர்களை அணைத்திடும் புது ஒளியே..
ஆசை மணி ஓசையிலே பூக்கும் நிலா கனவுகளை..
உன்னிடத்தில் பேச வந்தேன் பார்வையிலே பார்வையிலே..
மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்..
நானும் உனைத் தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே..
ஆசை மணி ஓசையிலே.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக