பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 22 மார்ச், 2011

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா..ஏனடி நீராடுது...

1976 இல் வெளி வந்த படங்களில் இடம் பெற்ற பாடல்களில் இந்த பாடல் தனி இடம் பிடித்தது. கர்னாடக ஸங்கீதத்தின் அடிப் படையில் அமைந்த அருமையான பாடல்களில் ஒன்று. சங்கீத வித்வான் K J ஜேஸுதாசுக்கு இணையாக ஈடு கொடுத்து பிரமாதமாக பாடி இருக்கிறார் திருமதி P சுசீலா அவர்கள்.


திரைப் படம்: மதன மாளிகை (1976)
இசை: M B ஸ்ரீனிவாசன்
நடிப்பு: சிவகுமார், அல்கா, மஞ்சுளா
இயக்கம்: K விஜயன்




http://www.divshare.com/download/14357656-d11





ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...
ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...

அதன் இதழ்களின் மீது பாண்டிய நாட்டு
முத்துக்கள் யார் தந்தது..
ஆ..ஆ..ஆ.. ஆ..
அதன் இதழ்களின் மீது பாண்டிய நாட்டு
முத்துக்கள் யார் தந்தது..
ஆ..ஆ..ஆ.. ஆ..

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...ஏனடி நீராடுது...


மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை..
ஆ ஆ ஆ ஆ
மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை..

அந்த மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று
மங்கல நீராடுது..மங்கல நீராடுது..
ஆ..ஆ..ஆ..ஆ..

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...

பார்வையில் கொஞ்சம் பருகிய அழகை
கைகளும் சுவைத்துப் பார்க்கட்டுமே
பாதத்தில் தொடங்கி கூந்தலின் வரையில்
ஆனந்த ராகம் கேட்கட்டுமே
கண்படும்போதே கசங்கிய மேனி
கைபடும்போது என்னாகும்
கண்படும்போதே கசங்கிய மேனி
கைபடும்போது என்னாகும்

காவலை மீறிப் போகிற வேளை
செவ்விதழ் மேலும் புண்ணாகும்

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...ஏனடி நீராடுது...


பூரண கும்பம் ஏந்தி நடந்தால்
நூலிடை பாவம் வருந்தாதோ
காதலன் கைகள் தாங்கி நடந்தால்
பாரமும் கொஞ்சம் குறையாதோ
என்னென்ன சுகங்கள் எங்கெங்கு என்று
சோதனை போட்டால் ஆகாதோ
இரவினில் தோன்றி விடிந்த பின்னாலும்
மோகன மயக்கம் தீராதோ

ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா
ஏனடி நீராடுது...ஏனடி நீராடுது...
மாலையிலே வரும் மன்னனுக்கென்று
மன்மத ஆராதனை..

அந்த மகிழ்வினில் நெஞ்சம் மயங்கிட நின்று
மங்கல நீராடுது..மங்கல நீராடுது..
ஆ..ஆ..ஆ..ஆ..

ஏரியிலே ஒரு..
ஆ ஆ ஆ
காஷ்மீர் ரோஜா..
ஆ ஆ ஆ ஆ
ஏனடி நீராடுது...
ஆ ஆ ஆ ஆ


4 கருத்துகள்:

அப்பாதுரை சொன்னது…

கொஞ்சம் நடுக்கமா இருக்குங்க.
உண்மையா இந்தப் பாட்டை பதிவுல போடச்சொல்லி உங்களைக் கேக்கலாம்னு நேத்து தான் நெனச்சேன்..

மதுரை சரவணன் சொன்னது…

நல்ல பாடல் பகிர்வு..வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

வணக்கம் சார்

"ஏரியிலே ஒரு காஸ்மீர் ரோஜா " யேசுதாசின் அற்ப்புதமான பாடல்.
பாடல வரிகள். வாலி

மிக்க நன்றி.

அன்புடன்
தாஸ்

Raashid Ahamed சொன்னது…

மென்மை இனிமை அழகு மேலும் சிறந்த வரிகள் அற்புதமான இரு குரல்கள் இவற்றின் மொத்த உருவமே இந்த பாடல்.

கருத்துரையிடுக