பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 18 ஜனவரி, 2011

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ

இளையராஜாவின் அருமையான இசையில் K J Y மற்றும் S. ஜானகி குரல்களில் இது எனக்கும் பிடித்தப் பாடல்களில் ஒன்று



திரைப்படம்: ஆனந்த ராகம் (1982)
நடிப்பு: சிவகுமார், ராதா
தயாரிப்பு/பாடல் வரிகள்: பஞ்சு அருணாசலம்



http://www.divshare.com/download/13804184-9c0





சோகமாக அதே பாடல்:







ஓ ஓ ஓ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ம் ம் ம் ம் ம் ம்

ம் ம் ம் ம் ம் ம்

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகமிது

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

மாலை நேரக் காற்றில் மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே
மாலை சூடி நாளும் என்னை ஆளும் தெய்வம் நீயே
காதல் தேவி எங்கே தேடும் நெஞ்சம் அங்கே
தேரில் போகும் தேவதை நேரில் வந்த நேரமே
என்னுள்ளம் இன்று வானில் போகுதே

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

ஏதோ நூறு ஜென்மம் ஒன்று சேர்ந்து வந்த சொந்தம்
வாழும் காலம் யாவும் துணையாக வேண்டும் என்றும்
காலம் தந்த பந்தம் காதல் என்னும் கீதம்
ஜீவ நாதம் கேட்குதே சேர்ந்து இன்பம் கூட்டுதே
வராத காலம் வந்து சேர்ந்ததே

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகமிது

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக