பின்பற்றுபவர்கள்

திங்கள், 17 ஜனவரி, 2011

மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூதுவிட்டேன்

T ராஜேந்தர் இசையமைப்பில் பல பாடல்கள் அருமையானவை. சமீபத்தில் அவர் சோடை போனது ஏன் என்பது தெரியவில்லை. அவருடைய சிறந்த பாடல்களில் ஒன்று இது.  SPB குரலினிமையும் இதில் ஒரு சிறப்பு.


படம்: ராகம் தேடும் பல்லவி (1982)
இசை/இயக்கம்/பாடல் வரிகள்: ராஜேந்தர்




http://asoktamil.opendrive.com/files/Nl8zODYxNTA1Nl9MZnNUNF84ZTk3/Moongilile%20paatisaikkum.mp3







மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூதுவிட்டேன்

அவள் முக வடிவை மனம் பார்த்த பின்னே அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை
அவள் முக வடிவை மனம் பார்த்த பின்னே அந்த பௌர்ணமியை இவன் ரசிப்பதில்லை
மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூதுவிட்டேன்

இரு விழி கவிதை தினசரிப் படித்தேன் பொருளதை அறிய வழியேதும் இல்லை
ஆ ஆ ஆ ஆ ஆ
இரு விழி கவிதை தினசரிப் படித்தேன் பொருளதை அறிய வழியேதும் இல்லை
புது புது வார்த்தை தினம் தினம் தேடி பார்வையில் அமுதாய் அவள் வடித்தாள்
நீரலைப் போலவே நீல விழிக் கோலங்கள் நெஞ்சை நீராட்டவே நெருடி தாலாட்டவே
என் கற்பனைக்கு விதை தூவினாள்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
என் கற்பனைக்கு விதை தூவினாள்
மூங்கிலிலே ஹா ஹா ஹா ஹா பாட்டிசைக்கும் ஹோ ஹோ ஹோ ஹோ காற்றலையை ஹெ ஹெ ஹெ ஹெ தூதுவிட்டேன் தரர தரர தரர தரர

ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த மின்னலென நெளிந்த மேனகையோ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆடை ஒன்றை எடுத்து தென்றலுக்கு உடுத்த மின்னலென நெளிந்த மேனகையோ
செங்கரும்புச் சாரும் செவ்விதழில் தானே இனிப்பெனும் சுவையை கற்றுக் கொண்டது
ஆ ஆ ஆ ஆ ஆ
மாது இதழிடத்திலே மாதுளங்கனி முத்தை சிவப்பாக்கவே மாதவம் செய்தது
அவள் வரம் தரவே சென்னிறமானது
ஹை ஹை ஹை ஹை
அவள் வரம் தரவே சென்னிறமானது
மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூதுவிட்டேன்

2 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

எவ்வளவு இனிமையான பாடல். பாடல் வரிகள், S.P.B குரலினிமை, இசை எல்லாம் சரியாக அமையப் பெற்ற ஒரு அருமையான பாடல்.

B A Saravanan சொன்னது…

நல்ல தொகுப்பு 🙏🙏🙏

கருத்துரையிடுக