பின்பற்றுபவர்கள்

புதன், 12 ஜனவரி, 2011

கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ

மிக அருமையான பாடல். மிக சாதாரண இசையும் SPBயின் குரலில் மிக பிரமாதமாகிவிடுகிறது.


திரைப்படம்: மகரந்தம் (1981)
இயக்கம்: கோபாலகிருஷ்ணன்
நடிப்பு: மோகன் ராம், ராதிகா, அருணா
இசை: சங்கர் கணேஷ் (அப்படியா பிரமாதம்!!!)




http://www.divshare.com/download/13756597-b56



ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ
கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ
என் உடலில் உணர்வு பொங்கும் உந்தன் உருவை தாண்டுமோ
வேறு உறவை தீண்டுமோ

சின்ன சின்ன காரணத்தால் கண்ணமதில் நீர்த்துளிகள்
சின்ன சின்ன காரணத்தால் கண்ணமதில் நீர்த்துளிகள்
என்னை மட்டும் புரிந்துக் கொண்டால் அத்தனையும் தேன் துளிகள்
என்னை மட்டும் புரிந்துக் கொண்டால் அத்தனையும் தேன் துளிகள்
தேன் துளியை தேக்கி வைக்கும் தாமரையில் இதயமம்மா
தேன் துளியை தேக்கி வைக்கும் தாமரையில் இதயமம்மா
தாமரையை மலர வைக்கும் ஆதவனின் உதயமம்மா
கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ

கண்கள் சொன்ன கவிதை எல்லாம் கல்லெழுத்து போன்றதம்மா
கண்கள் சொன்ன கவிதை எல்லாம் கல்லெழுத்து போன்றதம்மா
கல்லெழுத்து என்றிருந்தால் காலம் என்ன செய்யுமம்மா
கல்லெழுத்து என்றிருந்தால் காலம் என்ன செய்யுமம்மா
நீரிடித்து நீர் விலகீ பார்த்ததில்லை பூமியிலே
நீரிடித்து நீர் விலகீ பார்த்ததில்லை பூமியிலே
நீ பிரிந்து நானிருந்தால் வாழ்க்கையில்லை பொன்மகளே
கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ
என் உடலில் உணர்வு பொங்கும் உந்தன் உருவை தாண்டுமோ
வேறு உறவை தீண்டுமோ

1 கருத்து:

தமிழ் உதயம் சொன்னது…

எனக்கு ரெம்ப ரெம்ப பிடித்த பாடலாச்சே.

கருத்துரையிடுக