பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்..

திருமதி P சுசீலா அம்மாவின் குரலில், இனிமையாக இசையமைக்கப்பட்ட மற்றொறு இனிமையான அரியதான ஒரு பாடல்.


திரைபடம்: தென்றல் வீசும் (1962)
இயக்கம்: B S ரங்கா
இசை: M S விஸ்வனாதன் T K ராமமூர்த்தி



http://www.divshare.com/download/13727130-f70


ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ம் ம் ம் ம் ம் ம் ம்

மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்..
வாடாத முல்லை இது பாடி வரும் தேணீ..
மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்..
வாடாத முல்லை இது பாடி வரும் தேணீ..
தெவிட்டாத இனிமை இது திகட்டாத புதுமை..
பளிங்கான பதுமை இது பழகாத இளமை..
தெவிட்டாத இனிமை இது திகட்டாத புதுமை..
பளிங்கான பதுமை இது பழகாத இளமை..
மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்..
வாடாத முல்லை இது பாடி வரும் தேணீ..

ஆசையுடன் ஓடிவரும் அழகு முகம் ஒன்று..
அஞ்சியே நடுங்கி வரும் அன்பு முகம் ஒன்று..
பாச மலர் கொண்டு வரும் பருவ முகம் ஒன்று..
பார்த்தவுடன் நானமென்ன சிவந்த முகம் ஒன்று..
மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்..
வாடாத முல்லை இது பாடி வரும் தேணீ..

மை வடியும் கண் பார்த்து மலரென்று சொல்வார்..
மயங்கி வரும் நடை பார்த்து அன்ன நடை என்பார்..
கையழகு பார்த்தவுடன் கவிதை மழை பொழிவார்..
காலமகள் பெற்றதொரு கோல மயில் என்பார்..
மீட்டாத வீணை இது வீசி வரும் தென்றல்..
வாடாத முல்லை இது பாடி வரும் தேணீ..
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக