பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 17 டிசம்பர், 2010

தொட்டுத் தொட்டு பாடவா... தொடர்ந்து வந்து பாடவா...

இசையமைப்பாளர்  S வேதாவின் நல்ல பாடல். அருமையான இருகுரலிசை.


படம்: வல்லவன் ஒருவன் (1966)
பாடியவர்கள்: T M S, P சுசீலா
இயக்கம்: R சுந்தரம்
நடிப்பு: ஜெயஷங்கர், விஜயலக்ஷ்மி
பாடல்: கண்ணதாசன்
 


http://www.divshare.com/download/13535089-2f7



தொட்டுத் தொட்டு பாடவா... தொடர்ந்து வந்து பாடவா... கட்டிக்கொண்டு பாடவா... கண்ணம் பார்த்து பாடவா...தொட்டுத் தொட்டு பாடவா...

தட்டித் தட்டி ஆடவா...தாவித் தாவி ஆடவா...கொட்டி வைத்த தேனிலே குளித்து வந்து ஆடவா...தட்டித் தட்டி ஆடவா...

அடியெடுத்த கால்களின் அதிசயத்தை பாடவா... நடனமாடும் பெண் மயில் ரகசியத்தை பாடவா...

அடியெடுத்த கால்களின் அதிசயத்தை பாடவா... நடனமாடும் பெண் மயில் ரகசியத்தை பாடவா...

இரவு நேரக் காற்றிலே இணைந்து வந்து ஆடவா...இரவு நேரக் காற்றிலே இணைந்து வந்து ஆடவா...உறவு தந்த தேரிலே உள்ளிருந்து ஆடவா...

தட்டித் தட்டி ஆடவா...தாவித் தாவி ஆடவா...கொட்டி வைத்த தேனிலே குளித்து வந்து ஆடவா...தட்டித் தட்டி ஆடவா...

பாடல் மட்டும் போதுமா பருவ ராகம் வேண்டுமா...ஆட வந்த கன்னியின் அந்தரங்கம் வேண்டுமா...

பாடல் மட்டும் போதுமா பருவ ராகம் வேண்டுமா...ஆட வந்த கன்னியின் அந்தரங்கம் வேண்டுமா...

ஆடை காட்டும் போதிலே ஆளைக்கட்டும் பெண்மையே...

ஆடை காட்டும் போதிலே ஆளைக்கட்டும் பெண்மையே...

ஜாடைக் கண்டு பாடவா...சரசம் கண்டு பாடவா...

தொட்டுத் தொட்டு பாடவா... தொடர்ந்து வந்து பாடவா... கட்டிக்கொண்டு பாடவா... கண்ணம் பார்த்து பாடவா...

தட்டித் தட்டி ஆடவா...தாவித் தாவி ஆடவா...கொட்டி வைத்த தேனிலே குளித்து வந்து ஆடவா...தட்டித் தட்டி ஆடவா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக