பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்...அது கட்டில் மேலே கதை சொல்லும்...

திருமணம் ஆகப் போகும் ஒரு இளம் பெண் பாடுவது போல் திருமதி சுசீலா குரல் கொடுத்திருக்கிறார். சில இடங்களில் ரொம்ப சிரமப்பட்டது போல தெரிகிறது. ஆனாலும் பாடல் இனிமையாக வளர்ந்துள்ளது.


படம்: மலை நாட்டு மங்கை (1974)

இயக்கம்: சுப்ரமணியம்
நடிப்பு: ஜெமினி, விஜய ஸ்ரீ
இசை, பாடலாசிரியர்: தெரியவில்லை










என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்...

அது கட்டில் மேலே கதை சொல்லும்...

என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்...

அது கட்டில் மேலே கதை சொல்லும்...

ஒன்னு ரெண்டு மூனு நாலு அஞ்சு ஆறு ஏழாம் நாளில்...

பாவை எனக்கு மேளம் தாளம் கல்யாணம்...

பூ மாலை சூடும் கல்யாணம்...

ல ல ல ல ல ல ல



மஞ்சத்தில் என்னை வைத்து கண்ணன் சொல்லும் பட்டங்கள்...

கன்னத்தில் கோலம் போடும் சின்ன சின்ன முத்தங்கள்...

அம்மம்மா போதும் என்று நானும் சொல்வேன் சட்டங்கள்...

ஒன்னு ரெண்டு மூனு நாலு அஞ்சு ஆறு ஏழாம் நாளில்...

பாவை எனக்கு மேளம் தாளம் கல்யாணம்...

பூ மாலை சூடும் கல்யாணம்...

என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்...

அது கட்டில் மேலே கதை சொல்லும்...

ல ல ல ல ல ல ல



கல்யாணம் என்றால் இந்த நெஞ்சுக்கென்ன கொண்டாட்டம்...

கள்ளூறும் பூவின் மேலே கண்கள் துள்ளும் வண்டாட்டம்...

இன்றைக்கு எந்தன் மேனி மின்னும் முல்லை செண்டாட்டம்...



ஒன்னு ரெண்டு மூனு நாலு அஞ்சு ஆறு ஏழாம் நாளில்...

பாவை எனக்கு மேளம் தாளம் கல்யாணம்...

பூ மாலை சூடும் கல்யாணம்...

என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்...

அது கட்டில் மேலே கதை சொல்லும்...

என் கண்ணில் ஓடும் புது வெள்ளம்...

அது கட்டில் மேலே கதை சொல்லும்...

ஒன்னு ரெண்டு மூனு நாலு அஞ்சு ஆறு ஏழாம் நாளில்...

பாவை எனக்கு மேளம் தாளம் கல்யாணம்...

பூ மாலை சூடும் கல்யாணம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக