பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு

அருமையான பாடல் ஒன்று. எஸ் பி பி பாடியதும்,  சுசீலா அம்மா பாடியதும் தனித்தனியே கானோளியோடு இணைத்திருக்கிறேன்.


படம்: தாயம் ஒன்று (1988)

இயக்கம்:செல்வகுமார்

இசை: இளையராஜா

குரல்கள்: SPB, P சுசீலா

நடிப்பு: அர்ஜுன், சீதா, பல்லவி












மனதிலே ஒரு பாட்டு

மழை வரும் அதைக் கேட்டு

இது பூபாளம் புது ஆலோலம்

விழிப் பூவும் மலரும் காலை நேரம்

மனதிலே ஒரு பாட்டு

மழை வரும் அதைக் கேட்டு...

காற்று பூவோடுக் கூடும்...

காதல் சங்கீதம் பாடும்...

பார்த்து என் உள்ளம் தேடும்...

பாசம் அன்போடு மூடும்...

இதயம் போடாத லயமும் கேட்டு...

இளமை பாடாத கவிதை பாட்டு...

இதயம் போடாத லயமும் கேட்டு...

இளமை பாடாத கவிதை பாட்டு...

இமைகளில் பல தாளம்...

இசைகளை அது கூறும்...

இரவிலும் பகலிலும்..

உன்னை பார்த்து பார்த்து பார்வை வாடும்...



மனதிலே ஒரு பாட்டு ....

மழை வரும் அதைக் கேட்டு...

நீயும் நூறாண்டு வாழ...

நேரம் பொன்னாக மாற...

நானும் பாமாலை போட...

தோளில் நான் வந்து சூட...

எனது ராகங்கள் எழுதும் வேதம்...

புதிய தாகங்கள் விழியில் ஊறும்...

எனது ராகங்கள் எழுதும் வேதம்...

புதிய தாகங்கள் விழியில் ஊறும்...

எழுந்து வா இளம் பூவே...

இசையிலே அழைத்தேனே...

இனிமைகள் தொடர் கதை...

இனி சோகம் ஏது சேரும் போது...



மனதிலே ஒரு பாட்டு ....

மழை வரும் அதைக் கேட்டு...



இது பூபாளம் புது ஆலோலம்...



விழிப் பூவும் மலரும் காலை நேரம்...



மனதிலே ஒரு பாட்டு ....

மழை வரும் அதைக் கேட்டு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக